Advertisment

"உள்ளே நுழைந்தால் நித்தியானந்தா கைது செய்யப்படுவார்" - மதுரை ஆதீனம் எச்சரிக்கை!

fg

மதுரை ஆதீனமாக இருந்த வந்த அருணகிரிநாதர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவர் மறைந்ததும் புதிய ஆதீனம் நான்தான் என்று சர்ச்சைக்கு பெயர்போன நித்தியானந்தா கருத்து தெரிவித்திருந்தார். மறைந்த ஆதீனம் அருணகிரிநாதர் அவரை சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய ஆதீனமாக நியமித்து, பின்னர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கினார்.

Advertisment

இந்நிலையில், திடீர் திருப்பமாக "மதுரை ஆதீனத்தின் 293வது சன்னிதானமாக பொறுப்பேற்றுள்ளேன்" என்று சில தினங்களுக்கு முன்பு நித்தியானந்தா தன்னுடைய முகப்புத்தகத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு அப்போதேபலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தற்போதைய ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், நிதியானந்தா ஒரு பொருட்டே கிடையாது. அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முயன்றால் கைது செய்யப்படுவார்" என்றார்.

Advertisment

nithyananda
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe