சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருந்த வீடியோ அம்பலமாகி இந்த மார்ச்சோடு 10 வருடங்கள் ஆனதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், அது தொடர்பான வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் நித்தியின் முன்னாள் சீடர்களான லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் கொடுத்த பாலியல் டார்ச்சர் தொடர்பான வழக்கில் அவருக்கு நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவருக்காக வெளியிடப்பட்ட புளு கார்னர் நோட்டீஸ் ரெட் கார்னர் நோட்டீஸாக மாறிய நிலையிலும் அவரைப் பிடிக்க பா.ஜ.க அரசு ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். நித்தி தரப்பால் சரிக்கட்டப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளும் அவருக்கு எதிராக வாயைத் திறக்கவே இல்லை என்கின்றனர்.

Advertisment

nithy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் நித்தியின் மாஜி மேனேஜர் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் கடத்தப்பட்ட வழக்கில், அந்தப் பெண்கள் ’நாங்கள் கடத்தப்படவில்லை என்று தாக்கல் செய்த அபிடவிட்டை ஏற்காத ஆமதாபாத் நீதிமன்றம், அவர்களை நேரில் ஆஜராக கூறியுள்ளது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவில் நித்தி ஆடுகிற கண்ணாமூச்சி ஆட்டமும், அதற்கு அதிகார வர்க்கம் தருகிற சப்போர்ட்டும் நித்தியால் பாதிக்கப்பட்டவர்களை வருத்தமடைய செய்துள்ளதாக சொல்கின்றனர்.