/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIT.jpg)
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவன் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த சௌரவ்சன் (23) திருச்சி என்.ஐ.டி கல்லூரி விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதிதான் கரோனா விடுமுறை முடிந்து வந்துள்ளார்.
சௌவ்ரசனுடன் தங்கியிருந்த சக மாணவர்கள்வெளியே சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்த போது, அறையின் உள்பக்கம் தாழிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சௌரவ்சன் அறையின் மின்விசிறியில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீசார் செளரவ்சன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/NIT-STUDENT.jpg)
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சௌரவ்சன் எதற்காக தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார் என அறையின் சக மாணவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)