ADVERTISEMENT
மாணவிகளை தவறாக நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது.
ADVERTISEMENT
விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஊடகங்களுக்கு பேட்டி ஏதும் கொடுக்கக்கூடாது. விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகளூடன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியுள்ளனர் நீதிபதிகள்.
இந்த வழக்கில் கைதாகியிருந்த முருகன், கருப்பசாமிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் நிர்மலாதேவிக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments