அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, வழக்கு விசாரணைக்காக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் தனக்கு உடல்நலக்குறைவு என்று காரணம் சொல்லி, நீதிமன்றத்திற்கு விடுப்பு மனு அளித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கு விசாரணையில் இன்று பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவர் ஆஜர் ஆனார்கள். வழக்கு விசாரணைக்குப்பின்னர் இவ்வழக்கின் மறு விசாரணை 5.9.2019க்கு ஒத்திவைக்கப்பட்டது.