Skip to main content

கூடுதலாகக் குற்றவாளிகளைச் சேர்ப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம்! -சிபிஐக்கு மாற்றக்கோரிய நிர்மலாதேவி வழக்கில் தீர்ப்பு!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

 

ஒரு வருடம் கடந்தும்,  ஏதோ ஒருவிதத்தில் பேசப்படுவதாக நிர்மலாதேவி வழக்கு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறது. இன்று, நிர்மலாதேவி மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துவிட்டது.  

 

n

 

நிர்மலாதேவி விவகாரத்தில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது. அவர்களின் பெயர் ஏனோ வழக்கில் சேர்க்கப்படவில்லை. யாருக்காக நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசினார் என்பது விசாரிக்கப்படவில்லை. சிபிசிஐடி போலீசார் நியாயமாக விசாரணை நடத்தாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். அதனால், நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சுகந்தி கோரியிருந்த மனுதான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  

 

நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையானது, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பிப்ரவரி 27-ஆம் தேதி இவ்வழக்கினை ஸ்ரீவி. மகளிர் விரைவு நீதிமன்றம் விசாரிப்பதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

இதனைத் தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், நிர்வாக நீதிபதி சத்யநாராயணா மற்றும் புகழேந்தி கொண்ட அமர்வு இன்று வழங்கியுள்ள தீர்ப்பில்  ‘சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி,  குற்றப்பத்திரிக்கை மற்றும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு  இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. அதனால்,  இந்நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை. சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாகச் குற்றவாளிகளைச் சேர்த்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும், கீழ் நீதிமன்ற விசாரணைக்கு விதித்திருந்த தடையையும் நீக்குகிறோம்.” என்று சுகந்தி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

ddd

 

 

ddd

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.