Advertisment

நிர்மலா தேவி கைது... ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்...

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

Advertisment

வழக்கில் தொடர்புடையவர்கள் கடந்த 18ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருப்பசாமி, முருகன் ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து நிர்மலாதேவிக்கான ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்டு பிறப்பித்த நீதிபதி பரிமளாதேவி வழக்கு விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Nirmala Devi

கோப்புப்படம்

இந்த நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இதுதொடர்பாக கூறும்போது, நிர்மலா தேவி இன்று சரண் அடைய இருந்தார். இந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என தெரிவித்தார்.

arrest mahila court Nirmala Devi Srivilliputhur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe