Advertisment

நிர்மலா தேவி வழக்கு - நவ.20க்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட் உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வந்தனர். இந்த வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் சி.பி.சி.ஐ.டியால் போடப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என முருகன் மற்றும் கருப்பசாமி, நிர்மலா தேவி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

Advertisment

வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி, வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Nirmala Devi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe