Skip to main content

மாணவி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு.... என் மகளுக்கு எப்போ நீதி கிடைக்கும்... அபர்ணாவின் பெற்றோர் கண்ணீர்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் கருணையே இல்லாமல் செயல்பட்டிருந்ததால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு கருணைகாட்டவில்லை. அதனால் மார்ச் 20 ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் நிர்பயாவைப் போலவே தங்கள் குழந்தை பறிகொடுத்த புதுக்கோட்டை பள்ளி மாணவி அபர்ணாவின் பெற்றோர் எங்கள் குழந்தையை கொன்றவர்களுக்கு தண்டனையே இல்லையா என்று  கண்ணீர் வடிக்கிறார்கள்.

 

 nirbaya case;Aparna's parents cry for help


புதுக்கோட்டை மாவடடம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்  அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைக்குமார். மனைவியும் அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களின் இரண்டாவது குழந்தை அபர்ணா (15) தனியார்பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில்  2011 ம் ஆண்டு மார்ச் 9 ந் தேதி காலை பள்ளிக்கு தேர்வு எழுத செல்ல தயாராகிக் கொண்டிருந்த மாணவி அபர்ணாவை வீட்டுக்குள் நுழைந்த கயவர்கள் சின்னாபின்னமாக்கி கொன்றதுடன் நகைகளையும் அள்ளிக் கொண்டு சிறுமியை தூக்கில் தொங்கவிட்டு சென்றனர். இவற்றை எல்லாம் 5 வயது அபர்ணாவின் தம்பி பார்த்துக் கொண்டிருந்தான்.

பெற்றோருடன் போலீசாரும் வந்து தடயங்களை சேகரித்தனர். சிலரிடம் விசாரணையும் செய்தனர். குற்றவாளிகளை சிறுவன் அடையாளம் காட்டினான். பெரிய தண்டனை கிடைக்கும் என்று காத்திருந்தனர். ஆனால் வழக்கின் போக்கு சரியில்லை என்பதை அறிந்த கலைக்குமார் நீதிமன்றத்தை நாடினார் அதனால் சிபி சிஐடி விசாரணை கிடைத்தது. தொடர்ந்து சிபிஐ விசாரணை என 9 ஆண்டுகள் ஓடிவிட்டது. கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் எங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதில் சொல்லி தங்கள் இயலாமையை காட்டினார்கள்.

 

pudukottai

 

6 முறை மறைந்த மாஜி முதல்வர் ஜெ.விடமே மனு கொடுத்தும் நீதி கிடைக்கவில்லை. 16 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்துள்ளனர். நீதி கிடைக்கவில்லை என்றபதால் அரசும் காவல்துறையும் ஒரு கோடி இழப்பீடு கேட்டு மண்டும் நதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் டெல்லி மாணவி நிர்பயா கொலையாளிகளின் தூக்கு தண்டனை அபர்ணாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நீதி கிடைக்கும் என்று நீதிமன்றத்தையும் முதலமைச்சர் ஜெ உள்பட பலரையும்  நாடினோம் நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளனர். இந்த நிலையில் டெல்லி சம்பத்தைப் பார்த்து எங்களுஙக்கு நீதி கிடைக்கலயே என்று கண்கலங்கி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.