Skip to main content

நீரவ் மோடியும், பிரதமர் மோடியும் ஒன்றா? காந்தி பெயரை வைத்து ஏமாற்றும் காங்கிரஸ்: தமிழிசை கண்டனம்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
tamilisai 5


சட்ட விரோத பணப்பரிமாற்ற முறைகேட்டில் ஈடுபட்ட நீரவ் மோடியும், பிரதமர் மோடியும் ஒன்றா என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ராகுல் காந்தி பேசியது மிக மோசமான உரை, மோடி என பெயர் வைத்ததால் பிரதமர் மோடியும், நீரவ் மோடியும் ஒன்றா? சோனிய ராஜீவ் என்று பெயர் வைப்பதில் என்ன கஷ்டம்? பாமர மக்கள் இவர்கள் காந்தி குடும்பமோ அப்படி என்று ஏமாற்றப்படுவதற்கு காந்தியின் பெயரை பயண்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு குடும்பம், இன்று மோடியின் பெயரோடு தவறு செய்தவர் ஒருவர் பெயரை இணைத்து பேசுகிறது. இது எவ்வளவு தவறான காரியம்.

காந்தி பெயரை வைத்து ஏமாற்றும் உங்கள் குடும்பத்தை போல் மோடி ஏமாற்றவில்லை. இவர்கள் எல்லாம் நாட்டை முன்னேற்ற போகிறார்களா? தன் வாயலே ராகுல் கெட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒரு அமைப்பின் குரலாம் பாஜகவின் குரல். 22 மாநிலங்களை ஆண்டுக்கொண்டு மத்தியில் ஆட்சியையும் வைத்துக்கொண்டு, 60% மக்களின் ஆதரவை பெற்ற ஒரு கட்சியின் குரல், நாட்டின் குரலா? எதிர்கட்சியாக கூட இருக்க முடியாமல், 4 மாநிலத்தை கூட ஆழ முடியாத காங்கிரஸ் குரல், நாட்டின் குரலா? உங்களது ஒரு குடும்பத்தின் குரல்.

இதில் குஷ்பு வேறு பாஜகவின் குரல் தனிமனித மோடியின் குரலாம், இவர்களின் குரல் நாட்டின் குரலாம்.. இது ஒரு குடும்பத்தின் குரல். எவ்வளவு பெரிய தலைவரை வைத்துக்கொண்டு ராகுல் தான் தலைவர் என முன்னிலைப்படுத்துகிறார்கள். அது உங்கள் கட்சி, உங்கள் பிரச்சனை. எங்களுக்கு ஒன்றும் இல்லை. தேசபக்தி இயக்கத்தின் குரல் பாஜகவின் குரல். தேசபக்தர்களின் குரல். பல மாநிலங்களை இழந்து சுறுங்கிய காங்கிரஸ் கட்சி, தேசத்தின் குரல் என கூறிக்கொள்வது எவ்வாறு பொருந்தும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.