Skip to main content

அதிமுக பிரமுகர் உள்ளிட்ட மணல் கொள்ளையர்கள் 9 பேர் கைது!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

காவிரியில் மணல் தொடர்ந்து எடுத்ததால் மணல் எடுக்க அதிக தூரம் எடுக்க வேண்டி உள்ளதால் மணல் கொள்ளையர்கள் கவனம் தற்போது ஊருக்குள் ஓடும் ஆறுகளின் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது.தற்போது ஆளும் கட்சியின் பெயரை சொல்லி திருச்சி மாநகர் அருகே உள்ள கோரையற்றில் மணல் தொடர்ச்சியாக எடுக்க ஆரம்பித்துள்ளனர்.  இதனால் காவிரியில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. சில இடங்களில் தடை நீக்கப்பட்ட பின்னர் அரசே மணல் குவாரிகளை நடத்துவதுடன் ஆன்லைன் மூலம் மணல் விற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக டிஜிபி பொறுப்பேற்ற திருபாதி திருச்சிக்கு விசிட் வந்த போது மணல் கொள்ளை தடுக்கப்படும். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிது நடவடிக்கை எடக்கப்படும் என்றார். 

Nine suspects arrested including sand miner


இந்த நிலையில் திருச்சி மேலபஞ்சப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் திருட்டு நடப்பதாக எபுதூர் போலீசாருக்கு நள்ளிரவு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில் கன்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் எடமலைப்பட்டி புதூர் இன்ஸ் நிக்ஸன் மற்றும் போலிஸ் துணையோடு அப்பகுதியில் இரவு முழுவதும் மறைந்திருந்து அதிகாலை அப்பகுதியில் திடீரென தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது டிப்பர்களில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து 9 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம், 2 பைக், 3 ரூ.1.28 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் கள்ளிக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலு (எ) பாலசுப்ரமணியன் என்பதும், இவரது தலைமையில் மணல் அள்ளியதும் தெரியவந்தது. 
 

 

Nine suspects arrested including sand miner


இவரிடம் நடத்திய விசாரணையில் ஆளுங்கட்சி முக்கிய புள்ளி ஒருவரின் பின்புலத்தில் மணல் அள்ளியது தெரியவந்தது. இதுவரை எவ்வளவு யூனிட் மணல் கடத்தி உள்ளனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மணல் விற்ற பணம் 1.28 லட்சம் ரகசிய தகவலையடுத்து நள்ளிரவு முதல் அதிகாலை வரை மறைந்திருந்த போலீசார், திடீரென மணல் அள்ளும் இடத்திற்கு சென்று சுற்றி வளைத்தனர். 

வாகனங்களை பறிமுதல் செய்த நிலையில் நள்ளிரவு 3 லோடு மணல் திருடி விற்று வைத்திருந்த ரூ.1.28 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். ஒரு லோடு மணல் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.