Skip to main content

ஈரோட்டில் மீண்டும் 9 பேர் வீட்டுக்கு...-விரட்டப்படும் கரோனா!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கொடிய நோயான கரோனா தமிழகத்திலிருந்து துரத்துப்படுகிறது என்கிற நம்பிக்கை விதையாக நாளுக்கு நாள் இதன் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவதோடு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இனி மரணம்தான் என நம்பிக்கை இழந்த நோயாளிகள் பூரண குணம் பெற்று, வீட்டுக்கு செல்லும் எண்ணிக்கையைும் அதிகரித்து வருகிறது..

   Nine people back home in Erode


இந்த வைரஸ் தொற்று தொடங்கி விட்டது என தமிழகத்தில் தெரிந்த போதே அபாய நகரமாக அறிவிக்கப்பட்டது ஈரோடு. தொடர்ந்து அந்த நிலையில் தான் இருந்தது. சுமார் 70 பேர் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் மூலம் தொடர்புடையவர்கள் என கணக்கிட்டு ஏறக்குறைய ஒரு லட்சத்தி இருபது ஆயிரம் பேர் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். அந்த அளவுக்கு இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் இங்கு இருந்தது.
 

nakkheeran app


இந்த நிலையில் மாவட்ட அளவிலான அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லோருமே தொடர்ந்து ஈரோடு மாவட்டதில் இந்த வைரஸ் தொற்று இல்லாமல் செய்ய வேண்டுமென அர்ப்பணிப்போடு பாடுபட்டார்கள். அனைத்து துறை ஊழியர்களும், அவர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அதனால்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்ட ஈரோடு மாவட்டத்தில் இறப்பு என்பது ஒரே ஒரு நபருக்குதான் ஏற்பட்டது. அதன் பிறகு சிகிச்சை முடித்து, தொடர்ந்து அவர்களுக்கு இத்தொற்று இல்லை என்று ஆய்வறிக்கை வந்தபிறகு, மேலும் அவர்களை 14 நாட்கள் வைத்து இரண்டாவது முறையும் இத்தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து அதிலேயும் இல்லை என்று வந்த பிறகு அப்படிப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

 

 Nine people back home in Erode


ஏற்கனவே ரயில்வே காலனி மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரு மருத்துவர் உட்பட 4 பேரும் இதிலிருந்து விடுபட்டு அவர்கள் வீட்டுக்கு சென்றனர். அதேபோல் திருச்சியில் இருந்து வந்த ஒரு நபர் இதிலிருந்து விடுபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பு 13 பேர் குணமாகி, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலை, 9 பேர் இந்த வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியான பிறகு அவர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 68 பேர் இதில் பாதிப்பு உள்ளவர்கள் 44 பேர். இந்த 44 பேரும் நல்ல நிலையில், உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் சவுண்டம்மாள் நம்மிடம் கூறினார்கள். இந்த ஒன்பது பேரும் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு வீட்டுக்குச் செல்லும் அந்த ஒன்பது பேருக்கும் வாழ்த்துக் கூறியதோடு, இந்த நோயில் இருந்து நீங்கள் விடுபட்டு விட்டீர்கள் இதுபோல மற்ற யாருக்கும் வரக்கூடாது என்பதால் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், எனக் கூறி அனுப்பி வைத்தனர். 

தீராத துன்பமாக இந்த வைரஸ் தொற்று மனித குலத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில், இதையும் மனித ஆற்றல் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இச்சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் முகத்தில் தெரிகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.