நீலகிரி மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குபதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. குன்னூர் தாலுக்கா மற்றும் கோத்தகிரி தாலுக்கா ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ள தாலுக்கா ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு நடைப்பெற்று வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த வாக்குப் பதிவில் 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் , 17 கிராம ஊராட்சி தலைவர்கள், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான வாக்கு பதிவு தான் தற்போது நடந்து வருகிறது. மலை பிரதேசம் என்பதால் காலையில் சற்று குளிர் அதிகம் உள்ளதால் வாக்குப் பதிவு சற்று மந்தமாகவே காணப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.