Skip to main content

அதிகாரிகளின் அலட்சியத்தால் பள்ளி மாணவன் உயிரிழப்பு!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. பழமையான சிறப்பு மிக்க பள்ளி.  இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் மேல் மின்கம்பிகள் செல்கிறது. சுமார் 18 வருடங்களாக பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகம், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஆபத்தை உணர்ந்து, அந்த மின்கம்பிகளை அகற்றிக் கொடுங்கள் என்று மின்வாரியம் தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை புகார் மனுக்களை கொடுத்துள்ளனர். 

NILGIRIS GOVT PRIMARY SCHOOLS INCIDENT STUDENT PEOPLES AND PARENTS SHOCK



கடந்த ஆண்டு நவம்பர் 28- ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார். அதற்கும் எந்த நடவடிக்கை இல்லை. அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மறுபடியும் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு வந்த மின்வாரிய அதிகாரிகள் பள்ளிக்கு அருகில் இருந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர். பள்ளியிலிருந்து ரூ. 4500 செலவு செய்து மரங்களை வெட்டி அகற்றிக் கொடுத்து மாதம் கடந்துவிட்டது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் வரவில்லை.

NILGIRIS GOVT PRIMARY SCHOOLS INCIDENT STUDENT PEOPLES AND PARENTS SHOCK



அதனால் ஏற்பட்ட விளைவு, ஒரு மாணவனின் உயிரை குடித்துவிட்டார்கள், அலட்சியம் காட்டிய அதிகாரிகள். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை மேல் அட்டிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வடிவேல் மகன் ஹரிஹரன் (8 வயது). புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3- ஆம் வகுப்பு படிக்கிறான். வழக்கம் போல் 10- ஆம் தேதி பள்ளிக்கு சென்றான். ஓணம் பண்டிகைக்காக மதியம் விடுமுறை விடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். 
 

ஆனால் ஹரிஹரன் பல நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்து கிடந்த கிரிக்கெட் பந்தை எடுக்க நினைத்து, படிகள் இல்லாத கட்டிடத்தின் மேல் சுற்றுச்சுவரைப் பிடித்துக் கொண்டு ஏறி பாசிபடிந்த மேல்தளத்தில் பந்தை எடுத்த போது, பாசிபடிந்த தரை வழுக்கி கீழே விழப் போவதை அறிந்து அருகில் சென்ற மின்கம்பிளை பிடித்துக் கொண்டான். மின்சாரம் சென்ற அந்த மின்கம்பிகளில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட மாணவன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான். 

NILGIRIS GOVT PRIMARY SCHOOLS INCIDENT STUDENT PEOPLES AND PARENTS SHOCK


அலட்சியமாக இருந்து ஒரு மாணவனின் உயிரைக் குடித்த அதிகாரிகள் வேகமாக வந்து பள்ளியின் கட்டிடத்தை பார்த்தனர். தங்கள் மேல் தவறு இல்லை என்பதை காட்டிக் கொள்ள, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கனிவாக பேசி இவ்வளவு நாளா கம்பி இப்படி போறதை சொல்லக் கூடாது என்று எதையும் தெரியாதது போல அதிகாரிகள் பேசியதை மக்கள் வெறுப்பாக பார்த்தனர். பழைய மனுக்களின் நகல் கொடுங்கள் என்று வாங்கிச் சென்றனர். இது குறித்து பந்தலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறும் போது, மின்கம்பிகள் அமைந்துள்ள இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்த பொறியாளர் உள்பட அதிகாரிகள், அதன் பிறகும் மாற்றி அமைக்காத மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், மின்வாரியம் உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளும் இந்த மாணவனின் இறப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது என்பதற்காக ஏழைகளின் உயிரை குடிக்களாமா இந்த அதிகாரிகள்.

NILGIRIS GOVT PRIMARY SCHOOLS INCIDENT STUDENT PEOPLES AND PARENTS SHOCK


அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் தான் இந்த கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிகமாக 6 அரசு பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று காரணம் காட்டி பூட்டி இருக்கிறார்கள். அதிகாரிகள் சரியாக செயல்பட்டிருந்தால் எந்த பள்ளியையும் மூடியிருக்க வேண்டியதில்லை. அரசு பள்ளிகள் என்றால் ஏன் அரசாங்க சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அலட்சியம் காட்ட வேண்டும் என்றனர் .

NILGIRIS GOVT PRIMARY SCHOOLS INCIDENT STUDENT PEOPLES AND PARENTS SHOCK

மேலும் மாவட்ட ஆட்சியர் அவர் பெற்ற மனுவுக்கு எடுத்த நடவடிக்கை என்ன? என்பதையும் சொல்ல வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்டும் அலட்சியமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியத்தால் உயிரைப் பறித்த மாணவன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை இழப்பீடும், அந்த குடும்பத்திற்கு அரசு வேலை ஒன்றும் வழங்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் என்ன சொல்லப்போகிறார்களோ, இனிமேலாவது ஏழை மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அலட்சியம் காட்டுவதை தவிர்க்கலாம்.



        

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.