தமிழகம் முழுவதும் பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி அணை மொத்த கொள்ளளவான 171 அடியை எட்டியது. இதனையடுத்து அவலாஞ்சி அணை திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆட்சியர் அறிவுறுத்திள்ளார்.