Skip to main content

மதுக்கடையில் கொள்ளை முயற்சி; துப்பாக்கிச் சூடு நடத்தி கொள்ளையனை பிடித்த போலீசார்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

nilgiri pandalur kunthalady tasmac shop related incident police investigation started 

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள குந்தலாடியில் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்தது கடையின் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் குந்தலாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குந்தலாடியில் உள்ள மதுக்கடை திறந்து இருப்பதை போலீசார் கவனித்தனர். அந்த சமயத்தில் கடையின் கதவு திறந்து இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதையடுத்து போலீசார் மதுக்கடை அருகே சென்று பார்த்த போது கடைக்குள் இரண்டு  மர்ம நபர்கள் இருந்தனர்.

 

அப்போது அங்கிருந்த இருவரும் மதுபாட்டில்களை சாக்குப்பையில் நிரப்பிக் கொண்டு இருந்தனர். ஏற்கனவே கடையில் இருந்த பணப்பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து இருப்பதையும் போலீசார் கவனித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். இருப்பினும் போலீசார் துணிச்சலுடன் இருவரையும் பிடிக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் திடீரென்று அங்கிருந்த மது பாட்டில்களை உடைத்து போலீசாரை நோக்கி வீசியுள்ளனர். இதில் போலீசார் இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் தற்காப்பு முயற்சியாக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

 

இதில் அங்கு இருந்த ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அந்த நபர் தப்பி ஓட முடியாமல் அங்கேயே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றொருவர் அங்கிருந்து தப்பி விட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த இரு காவலர்கள் மற்றும் கொள்ளையனை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசார் கொள்ளையனிடம் நடத்திய விசாரணையில் பந்தலூர் அடுத்துள்ள பாட்டவயல் அருகே கொட்டாடு என்ற பகுதியை சேர்ந்த சாம்பார் மணி என்பதும் அவருடன் வந்தவர் ஜிம்மி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கேரளாவில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய ஜிம்மியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் நீலகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.