Skip to main content

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நிலம்கொடா இயக்கம் துவக்கம்; போராட்ட களமாக மாறிய டெல்டா!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

ஹைட்ரோ கார்பன் விவகாரம் டெல்டா மாவட்டங்களில் போராட்டகளமாக மாற்றிவருகிறது. விவசாயிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவுசெய்திருப்பதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

 

  Nilam koda Movement Against Hydrocarbon; Delta to become a fight platform!

 

அதன் ஒருபகுதியாக, பி,ஆர்,பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் ஹைட்ரோகார்பன்  எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது, என மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கிராமங்களில் நிலம்கொடா இயக்கம் துவங்கப்பட்டு பாதாதைகள் வைக்கபட்டுள்ளது.

 

 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் வேதாந்த, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என்று நிலம் கொடா இயக்கத்தை துவக்கி வைத்து அதற்கான விளம்பர பலகையை திறந்து வைத்த விவசாயிகள் மத்திய , மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

 

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்," தமிழகத்தை அழிக்க மோடி அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. நியூட்ரினோ திட்டம் மூலம் மழை பொழிவை தரும் மேற்கு தொடர்ச்சி மலையை அழிக்க துடிக்கிறது. காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக நலனுக்கு எதிராக செயல்பகிறது.

 

 

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதின் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை உள்ளடக்கிய நாகப்பட்டினம், கோடியக்காடு வரை சுமார் 50 லட்சம் ஏக்கர் விளை நிலங்களையும், அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதியையும் வேதாந்தாவிற்கும், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களுக்கும் விற்றுள்ளதின் மூலம் ஒட்டு மொத்த தமிழகமும் போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறேன்.

 

 

ஏற்கனவே தென் மாவட்டங்களில் சாதீய கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி மக்களின் ஒற்றுமையை சீர் குளைத்து விட்டு தூத்துக்குடியில் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த சாதீய கலவரங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. போராட்டத்தில் சமரசமின்றி ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அரசியல் ரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. வேதாந்த நிறுவனத்தை விரட்டியடிக்கிற வகையில் விவசாயிகள் ஒன்றுபட்டு கிராமங்ள்தோறும் நிலங்கொடா இயக்கங்களை துவங்கி இருக்கிறோம்.

 

  Nilam koda Movement Against Hydrocarbon; Delta to become a fight platform!

 

தமிழக அரசு ஜாதிய கலவரங்கள் அரசியல் ரீதியான பிளவுகளை உருவாக்குகின்ற வேதாந்த நிறுவனம் தமிழ்நாட்டில் காலடி பதிப்பதற்கு தடைவிதிக்கவேண்டும் . உடனடியாக வேதாந்த , ஓஎன்ஜிசி , ரிலையன்ஸ் நிறுவனங்கள் விலை நிலங்கள் அபகாிப்பதை, ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுத்து நிறுத்துகிற வரையில் எங்கள் போராட்டம் ஓயபோவதில்லை. அதனை ஒன்றுபடுத்துகிற விதமாகதான் கிராமங்கள்தோறும் நிலம்கொடா இயக்கங்களை துவங்கி இருக்கிறோம் . 

 

 

இதை அனைத்துகிராமங்களிலும் துவங்குவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா என் உயிர் உள்ளவரை காவிாி டெல்டாவில் ஒருகுழி நிலத்தைகூட மீத்தேன் உள்ளிட்ட மாற்றுதிட்டங்களுக்கு அனுமதிக்கமாட்டேன் என்று தடைவிதித்தார். அவர் ஆட்சியை பின்பற்றுகிற எடப்பாடி பழனிச்சாமி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிப்பதற்கும் ஜெயலலிதாவிற்கு நன்றிகடனாக  அவர் ஆட்சி செயல்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்போடு இந்த போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கிறோம்." என்று முடித்தார்.

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

வேட்புமனு தாக்கல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் பரபரப்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கார்த்திகா தனது கட்சியினருடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வருகை தந்தார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஜானி டாம் வர்கீஸிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஆட்சியர் வழங்கிய உறுதிமொழி படிவத்தை வாங்கிப் பார்த்த வேட்பாளர் கார்த்திகா, பிறகு அதனைப் படிக்கத் துவங்கினார்.

அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ‘கார்த்திகா எனும் நான். மக்களவையில் காலியாக உள்ள இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான், சட்ட விதிகளுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு அமைப்பின்பால் உண்மையான கட்டுப்பாடும், உண்மையான நம்பிக்கையும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் முழு முதல் ஆட்சியையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும் எனக் கூறிய அவர், ஒரு கணம் நிறுத்தி, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து உளமார உறுதி கூறுகிறேன் என ஆட்சியருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

Nagapattinam is in a frenzy due to the action of Naam Tamilar Party candidate

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, ‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்க தலைவரின் பெயரை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டது சரியா என கேள்வி எழுப்பினர். உறுதிமொழி படிவத்தில் ஆண்டவர் என எழுதி இருந்தது. அதனைத் தவிர்த்து 13 கோடி தமிழர்களின் இறைவன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்’ என விளக்கம் கூறிய அவர், நாகை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்று அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் மீது உறுதிமொழி எடுக்கும் மெயின் பிக்சர் காட்சி அங்குதான் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சாசனப்படி வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அதனை முறையாகப் பின்பற்றாமல் தங்களுக்கு ஏற்றவாறு அதனை மாற்றிக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கான வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்கிற பேச்சு நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.