Skip to main content

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நிலம்கொடா இயக்கம் துவக்கம்; போராட்ட களமாக மாறிய டெல்டா!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

ஹைட்ரோ கார்பன் விவகாரம் டெல்டா மாவட்டங்களில் போராட்டகளமாக மாற்றிவருகிறது. விவசாயிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவுசெய்திருப்பதோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

 

  Nilam koda Movement Against Hydrocarbon; Delta to become a fight platform!

 

அதன் ஒருபகுதியாக, பி,ஆர்,பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் ஹைட்ரோகார்பன்  எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது, என மத்திய, மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கிராமங்களில் நிலம்கொடா இயக்கம் துவங்கப்பட்டு பாதாதைகள் வைக்கபட்டுள்ளது.

 

 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் வேதாந்த, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒருபிடி நிலம்கூட கிடையாது என்று நிலம் கொடா இயக்கத்தை துவக்கி வைத்து அதற்கான விளம்பர பலகையை திறந்து வைத்த விவசாயிகள் மத்திய , மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

 

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்," தமிழகத்தை அழிக்க மோடி அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. நியூட்ரினோ திட்டம் மூலம் மழை பொழிவை தரும் மேற்கு தொடர்ச்சி மலையை அழிக்க துடிக்கிறது. காவிரி, முல்லைபெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழக நலனுக்கு எதிராக செயல்பகிறது.

 

 

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளதின் மூலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை உள்ளடக்கிய நாகப்பட்டினம், கோடியக்காடு வரை சுமார் 50 லட்சம் ஏக்கர் விளை நிலங்களையும், அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதியையும் வேதாந்தாவிற்கும், ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களுக்கும் விற்றுள்ளதின் மூலம் ஒட்டு மொத்த தமிழகமும் போராட்டக்களமாக மாறும் என எச்சரிக்கிறேன்.

 

 

ஏற்கனவே தென் மாவட்டங்களில் சாதீய கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி மக்களின் ஒற்றுமையை சீர் குளைத்து விட்டு தூத்துக்குடியில் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த சாதீய கலவரங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. போராட்டத்தில் சமரசமின்றி ஈடுபட்டு வரும் விவசாயிகளையும் அரசியல் ரீதியாக பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. வேதாந்த நிறுவனத்தை விரட்டியடிக்கிற வகையில் விவசாயிகள் ஒன்றுபட்டு கிராமங்ள்தோறும் நிலங்கொடா இயக்கங்களை துவங்கி இருக்கிறோம்.

 

  Nilam koda Movement Against Hydrocarbon; Delta to become a fight platform!

 

தமிழக அரசு ஜாதிய கலவரங்கள் அரசியல் ரீதியான பிளவுகளை உருவாக்குகின்ற வேதாந்த நிறுவனம் தமிழ்நாட்டில் காலடி பதிப்பதற்கு தடைவிதிக்கவேண்டும் . உடனடியாக வேதாந்த , ஓஎன்ஜிசி , ரிலையன்ஸ் நிறுவனங்கள் விலை நிலங்கள் அபகாிப்பதை, ஹைட்ரோ கார்பன் எடுப்பதை தடுத்து நிறுத்துகிற வரையில் எங்கள் போராட்டம் ஓயபோவதில்லை. அதனை ஒன்றுபடுத்துகிற விதமாகதான் கிராமங்கள்தோறும் நிலம்கொடா இயக்கங்களை துவங்கி இருக்கிறோம் . 

 

 

இதை அனைத்துகிராமங்களிலும் துவங்குவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா என் உயிர் உள்ளவரை காவிாி டெல்டாவில் ஒருகுழி நிலத்தைகூட மீத்தேன் உள்ளிட்ட மாற்றுதிட்டங்களுக்கு அனுமதிக்கமாட்டேன் என்று தடைவிதித்தார். அவர் ஆட்சியை பின்பற்றுகிற எடப்பாடி பழனிச்சாமி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதிப்பதற்கும் ஜெயலலிதாவிற்கு நன்றிகடனாக  அவர் ஆட்சி செயல்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்போடு இந்த போராட்ட களத்தில் ஈடுபட்டிருக்கிறோம்." என்று முடித்தார்.

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.