Skip to main content

நிலக்கோட்டை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.களுடன் திமுக போட்டி..!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி அதன் அடிப்படையில் தான் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரான பொன்னம்மாளின் உறவினர் தான் திமுக வேட்பாளரான வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் இப்படி காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த சௌந்திரபாண்டியன் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திமுகவில் ஐக்கியமாகி திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.

 

soundarpandiyan


இவருடைய சொந்த ஊர் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டி ஆகும். இந்த செம்பட்டியில் இருந்து கொண்டுதான்  வழக்கறிஞர் தொழில் செய்துவரும் சௌந்திர பாண்டியன், கட்சி தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சி பணியாற்றி வருகிறார். அதோடு கட்சிக்காரர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தானே முன் சென்று பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துவருகிறார். இதன் மூலம் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வருகிறார். 
 

அதோடு கழக துணை பொதுச் செயலாளரும், துணைச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ பெரியசாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். 
 

அதன் அடிப்படையில்தான் இத்தொகுதிக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலுக்கு சென்றுவிட்டு திரும்பிகூட அதில் யாரை  தேர்தல் களத்தில் இறங்கினால் வெற்றி பெற முடியும் என ஐ. பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருடன் கட்சிப் பொறுப்பாளர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதின் பேரில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி பலத்துடன் இருக்கக்கூடிய சௌந்திரபாண்டியனுக்கு சீட்டு கொடுக்க முடிவு செய்தனர். அதை ஸ்டாலினிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக சௌவுந்திரபாண்டியனை ஐ.பி. பரிந்துரையின் பெயரில் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார் என பேசப்படுகிறது.
 

thenmozhi


அதுபோல் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தேன்மொழியை களமிறங்கியிருக்கிறார்கள். தேன்மொழி கடந்த 2006-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பெயர் சொல்லும் அளவுக்கு தொகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சரிவர செய்யவில்லை. அதுபோல் தேன்மொழி என் கணவர் சேகர் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவராகவும். பேரூர் கழக செயலாளராகவும் இருந்தும் கூட நகர மக்களின் அடிப்படை வசதிகளை சரிவர பூர்த்தி செய்யவில்லை அந்த அளவுக்கு தேன்மொழி மீதும் அவருடைய கணவர் சேகர் மீதும் மக்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு அதிருப்த்தி இருந்து வருகிறது.  


அதுபோல் ஆட்சி வந்தவுடன் யார் அமைச்சரோ அந்தப்பக்கம் இவர்கள் சாய்ந்து விடுவதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த முறை  முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆதரவாளராக இருந்த தேன்மொழியும், கணவர் சேகரும் தற்பொழுது சிட்டிங் அமைச்சரான வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் ஆதரவாளராக இருந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் அமைச்சர் சீனிவாசனின் பரிந்துரையின் பெயரில் தேன்மொழிக்கு மீண்டும் சீட் கிடைத்திருக்கிறது என இவர்கள் தரப்பில் பேசப்படுகிறது. ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற  அதிருப்தியும் தொகுதியில் உள்ளவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏவும். டிடிவி ஆதரவாளருமான தங்கத்துரையும் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தொகுதியில் களம் இறங்க இருப்பதால் தேர்தல் களமும் சூடு பிடிக்கப் போகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.