Skip to main content

'இரவு பார்ட்டி... காலையில் உயிரிழப்பு...'-இளம்பெண் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை!

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

'Night party ... issue in the morning ...' - Police investigation

 

சென்னை அடையாறு பாலத்தில் வேகமாக வந்த பைக் நிலை தடுமாறியதில் பைக்கில் ஆண் நண்பருடன் பயணித்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

நேற்று சென்னை அடையாறு பாலத்தில் பைக் ஒன்று விபத்தில் சிக்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க அங்கு சென்ற போலீசார் அடிபட்டு கிடந்த இளைஞர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் மீட்டனர். இதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்பதும், அந்த இளம்பெண்களில் ஒருவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

 

சென்னைக்கு வேலை தேடிவந்த அந்த இளம்பெண்கள் சேப்பாக்கத்தில் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளனர். அப்பொழுது 'கிளப் ஹவுஸ்' என்ற செல்போன் செயலியின் மூலம் பிரவீனுக்கும் இரு இளம்பெண்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. கிளப் ஹவுஸ் செயலியில் 'மீட் அப்' என்ற குரூப்பில் இருந்த அனைவரும் ரம்ஜான் விடுமுறையை களிக்க முடிவு செய்து ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றுள்ளனர். இரவு பார்ட்டியை முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு பிரவீனுடன் இந்த இரு பெண்களும் பைக்கில் கிளம்பிய நிலையில், அடையாறு மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த பிரவீன் வேகத்தைடையை கவனிக்காமல் பைக்கை செலுத்தியதால் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திருச்சியை சேர்ந்த பெண் மட்டும் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகைச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்றுவரும் பிரவீனின் பாக்கெட்டிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதையில் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.