தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

NIA officers raided various places in Tamil Nadu

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ)அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை, நெல்லை, உசிலம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி கட்சியின் மாநில தலைவர் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகச் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

NIA Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe