நாகை அருகே உள்ள நாகூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவது மீண்டும் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Advertisment

NIA investigates in nagore

கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமையினர் சந்தேகத்தின் பெயரில் உள்ளவர்களை விசாரித்தும் சோதனையிட்டும் வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பில் இருப்பவர்களின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக நாகை அடுத்துள்ள நாகூர் மியாந்தெரு முகமது அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சினில் இருந்து விரைந்து வந்த டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான 3 என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் தமிழக போலிசார் 10க்கும் மேற்பட்டோர் நாகூர் அடுத்த சண்ணமங்கலம் சேவாபாரதி பகுதியில் வசித்து வந்த முஹம்மது அஜ்மல் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்தனர்.

NIA investigates in nagore

ஆனால் அங்கு முஹம்மது அஜ்மல் வீட்டில் இல்லை, அவர் நாகூர் மியாந்தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்ததும் தெரியவந்தது. பின்னர் நாகூர் மியாந்தெருவ வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் உறவினர் வீட்டில் தங்கியிருந்த முஹம்மது அஜ்மலிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதனால் நாகூரில் மீண்டும் பரபரப்பு பற்றியிருக்கிறது.