Skip to main content

நெய்வேலியில் இரும்பு திருடும்போது ஏற்பட்ட உயிரிழப்பு; 4 ஆண்டுகள் கழித்து பழிக்குப் பழி படுகொலை

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Neyveli issue one passed away six arrested
சக்திவேல்

 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி என்பவரது மகன் இளங்கோவன் (வயது 44). இவரும் இவரது நண்பரும், கூலித் தொழிலாளியுமான, சக்திவேல் (வயது 45) என்பவரும் அவ்வப்போது நெய்வேலி என்.எல்.சி பகுதிகளில் இரும்பு திருடுவார்கள் என கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேலும், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரகுமார் என்பவரும் இணைந்து நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரும்பு திருடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி சுபாஷ் சந்திரகுமார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் சுபாஷ் சந்திரகுமாரின் அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ், சக்திவேல் மீது மிகுந்த கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

சக்திவேலும் அவரது கூட்டாளியுமான இளங்கோவனும், கடந்த 14-ஆம் தேதி, மேலக்குப்பம் பொன்னம்பலத்தான் தெருவில் அமைந்துள்ள வீரன் கோவிலில் படுத்திருக்கும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் மணிகண்டன், அர்னால்ட், விக்கி, சுரேஷ்(எ)கோவிந்தன், காக்கி என்ற விஜயபாலன் உள்ளிட்டோர் சேர்ந்து, "எனது தம்பி சுபாஷ் சந்திரகுமாரை திருட்டு சம்பவத்திற்க்கு அழைத்துச் சென்று, அவரை சாகடித்தது நீங்கள் தான்டா...." என்று கூறி, இளங்கோவனையும், சக்திவேலையும் சரமாரியாக, கையாளும் கட்டையாலும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, அருகில் உள்ள முந்திரி தோப்புக்கு தூக்கி சென்று, சரமாரியாக மீண்டும் தாக்கியுள்ளனர். 

 

Neyveli issue one passed away six arrested

 

இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். சக்திவேல் இறந்ததை பார்த்த அவரது கூட்டாளியான இளங்கோவன் அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு சென்று, இதுகுறித்து, நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சக்திவேலை அடித்துக் கொன்றதாகவும், தன்னையும் தாக்கினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இளங்கோவனை அழைத்துக் கொண்டு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கொலை செய்த குற்றவாளிகளான 6 பேரை நெய்வேலி தெர்மல் போலீசார் தேடிவந்த நிலையில், அர்னால்ட் (வயது 22), பாண்டியன் (வயது 25), விக்கி என்கிற விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று மீதமுள்ள மூன்று குற்றவாளிகளான சுபாஷ் சந்திரபோஸ், சுரேஷ் என்கிற கோவிந்தன், காக்கி என்ற விஜயபாலன் ஆகியோரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.