Skip to main content

அ.தி.மு.க நகர செயலாளரரை கைது செய்ய கோரி சாலை மறியல்! 

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

கடலூர் மாவட்டம் நெய்வேலி பெரியாக்குறிச்சியிலுள்ள தனியார் திருமண மண்டபம் பின்புறம் வசிப்பவர் கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி திவ்யா (27) விதவை பெண்ணான இவர் தனது தாய் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 
 

neyveli issue



இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு  ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அ.தி.மு.க கெங்கைகொண்டான் நகர செயலாளர் மனோகர் என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி திவ்யாவிடம் ஆதார் கார்டு, ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு தனது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். 

அதன்படி அங்கு சென்ற அந்த  பெண்ணை அவர் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார். இந்நிலையில் திவ்யா வேலைசெய்யும் ஜவுளிகடைக்கு வந்த மனோகரனின்  மனைவி மகா என்கிற மகாலட்சுமி பாதிக்கப்பட்ட பெண் திவ்யாவை 'எனது கணவரிடம் ஏன் பேசுகிறாய்? பழகுகிறாய்?' என்று கூறி  செருப்பால் அடித்தாக கூறப்படுகிறது. 

இதனால் அவமானம் தாங்க முடியாத திவ்யா எலி மருந்து சாப்பிட்டுள்ளார். அவர் வாந்தி எடுப்பதை கண்ட அவரது குடும்பத்தார்  உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக மந்தாரக்குப்பம் ஜெயப்பிரியா பேருந்து நிலையம் எதிரில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் அதிமுக நகர செயலாளர் மனோகரன் மற்றும் அவரது மனைவியை கைது செய்ய வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட பொன்னின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

neyveli issue



இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அதையடுத்து திவ்யாவின் சடலத்தை பெறாமல் போராட்டம் நடத்திய திவ்யாவின் உறவினர்களும் அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணின் குடும்பத்திற்கு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்படி ரூபாய் எட்டு லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும், 11ஆம் வகுப்பு படித்து வரும் திவ்யாவின் மகனுக்கு படிப்பு முடித்தவுடன் அரசு வேலை வழங்க வேண்டும். இதில் தொடர்புடைய மனோகரன் மற்றும் அவரது மனைவியை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்ட உறவினர்கள் திவ்யாவின் சடலத்தை பெற்று அடக்கம் செய்வதாக ஒப்புக்கொண்டனர்.    

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.