Skip to main content

அடுத்த கேப் டவுன் சென்னைதான்- நல்லுசாமி பேட்டி!

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

ஆளும் அரசு நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தவறியதன் விலைவே தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லுசாமி.

மயிலாடுதுறை வந்திருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், "உலகில் பல்வேறு நாடுகளில் நிலத்தடி நீரை எடுக்க தடை இருக்கிறது ஆனால் தமிழகத்தில் மட்டுமே தேவைக்கு அதிகமாகவே நிலத்தடி நீரை உறிஞ்சி வீணாக்குகிறோம். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்பில்லை. ஆனால் நாற்றங்கால் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது அறுவடை வரை அனைத்து விவசாயிகளுக்கும் நிலத்தடி நீரையே பயன்படுத்தப்போகிறோம்.இது ஹைட்ரோகார்பன் எடுப்பதால் ஏற்படும் விளைவைவிட மோசமான விளைவை ஏற்படுத்தும்.

 The next Cape Town is Chennai - Nalusamy interview!


ஏரி குளங்களை துர்த்து அரசு பல்வேறு இடங்களில் கட்டடங்களை கட்டியுள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை, சேலம் பேருந்து நிலையம் ஏரியை துர்த்து கட்டப்பட்டுள்ளது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தென்னம்பாளையம் ஏரிரை துர்த்து கட்டப்பட்டுள்ளது. இதன் விளைவு தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரம் போன்று தண்ணீர் இல்லாத நிலை சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவில் வரும்.

முறையான திட்டமிடல் இல்லாதது குடிநீர் பிரச்சினைக்கு காரணம்.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் நிலத்தடி நீரையும் சேர்த்து கணக்கிட்டுள்ளனர். இது தவறான ஒன்றாகும் இதனை தமிழக அரசு ஏன் எதிர்க்கவில்லை என்பது புரியவில்லை. மாதாந்திர கணக்கு அடிப்படையில் காவிரியில் கர்நாடகா தண்ணீர் தருவதில்லை. அவர்களது வடிகாலாகத்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை பயன்படுத்துகின்றனர். பெட்ரோல் டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது போல் காவிரி நீரையும் தினசரி பங்கீடு செய்திருந்தால் 270 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்திருக்காது. அவ்வாறு செய்தால் மட்டுமே நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த முடியும். நிலத்தடி நீரை தொடர்ந்து எடுத்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் உள்ள 8 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலையாகிவிட்டது. நிலத்தடி நீர் தற்போது 500 அடி ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. வரும் காலத்தில் டெல்டா மாவட்டங்களில் தாவரங்களுக்கு கூட நீர் கிடைக்காமல் பாலைவனமாகும் நிலை ஏற்படும்." என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.