அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை

In the next 3 hours it will rain in 30 districts

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தென் மேற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (22.05.2024) குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாட்டில் 23 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படிகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், கரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, மதுரை, கோவை, திருப்பதூர், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய 30 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rainfall Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe