Advertisment

அடுத்த 3 மணி நேரம்; 27 மாவட்டங்களுக்கு அலர்ட்

For the next 3 hours; Alert given to 27 districts

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நீலகிரியில் கடந்த ஒரு சில தினங்களாக பல இடங்களில் கன மழை பொழிந்து வருகிறது. அதன்படி குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (19.07.2024) அதி கனமழை பெய்யக்கூடும். அதாவது 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று 12 செ.மீ. முதல் 20 செ. மீ. வரை மிக கனமழை பெய்யக்கூடும். அதோடு திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூரில் நாளை (20.07.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் இரவு 7:00 மணி வரை தமிழகத்தின் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி நீலகிரி, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu weather rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe