Advertisment

அடுத்த 3 மணி நேரம்; 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

For the next 3 hours; Alert for 9 districts

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அதீத கனமழை பொழிந்து வருகிறது. குடகு உட்பட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் தட்சண கன்னடா மாவட்டத்தில் மூல்கி பகுதியில் 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

karnataka Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe