புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

newyear celebration 2020 108 ambulance ready tn health minister

Advertisment

Advertisment

மேலும் விபத்துக்களை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் 50 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை (31.12.2019) இரவு 11.00 மணி முதல்மறுநாள் அதிகாலை 01.00 மணி வரைமெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.