Skip to main content

எனக்கு அம்மா, அப்பா வேண்டாம்... நீ தான் வேணும்... திருமணம் நடந்த புதுப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

காதல் திருமணம் நடந்து முடிந்த 20 நாளில் புதுப்பெண் மாப்பிள்ளை வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில்  ஒரு பிரபல தனியார் சாப்ட்வேர் கம்பெனியில்  சாப்ட்வேர் என்ஜினீயராக பூர்ணிமா வேலை பார்த்து வருகின்றார். வேலைக்கு செல்லும் போது அதே பகுதியில் இருக்கும் கார்த்திக் என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு இவர்களுடைய நட்பு காதலாக மாறியுள்ளது. இதனால் பூர்ணிமாவும், கார்த்திக்கும் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் இரண்டு வீட்டிற்கும் நாளடைவில் தெரிய வந்துள்ளது. பூர்ணிமாவின் பெற்றோர்கள் அவருடைய காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கார்த்திக் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.  

 

poornima



இதனை தொடர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பூர்ணிமா காதலன் கார்த்திக்கை கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், இவர்கள் திருமணத்தில் பூர்ணிமாவின் பெற்றோர், உறவினர்கள் என யாரும் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தில் கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்துள்ளனர். திருமணம் முடிந்தும் பெற்றோர் தன்னை ஒதுக்கிவிட்டனர் என நினைத்து மன வருத்தத்தில் பூர்ணிமா இருந்ததாக கூறுகின்றனர். 


இந்தநிலையில் நேற்று கடந்த செவ்வாய்க்கிழமை பூர்ணிமா கார்த்திக்கின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். பூர்ணிமா தற்கொலை செய்துகொண்டதை அவரின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் பெற்றோர், கார்த்திக் மற்றும் அவருடைய பெற்றோர் தங்கள் மகளை கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கின்றனர்.  காதல் திருமணம்  முடிந்த 20 நாளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூர்ணிமா தற்கொலை செய்துகொண்டாரா? அப்படி தற்கொலை செய்து இருந்தால் தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.