Newborn baby lying in rubbish bin ... Police in serious investigation

திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள குப்பை தொட்டியில்தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் உயிருடன் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இன்று (29.07.2021) அதிகாலை குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தேடி பார்த்தபோது, ஒரு ஆண் குழந்தை இருந்ததைப் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை காவல்துறையினர், குழந்தையைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவுசெய்து குழந்தை யாருடையது என்பதை விசாரிக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment