சென்னை புதிய வண்ணராப்பேட்டை மற்றும் திருவெற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டுக்குத்தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் அந்தப் பகுதியில் கூடினர். காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க வந்த அவர்கள் யாரும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இந்த மார்க்கெட்டுக்கு வந்தவர்களில் சிலர் முகக் கவசங்கள் அணியவில்லை. பெரும்பாலானோர் முகக் கவசங்களை அணிந்திருந்தாலும் அதனை மூக்கு, தாடைக்கு கீழே இறக்கிவிட்டிருந்தனர்.