Skip to main content

திண்டுக்கல்லில் உருவாகும் புதிய சுற்றுலாத்தலம்!! 

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

ஆத்தூர் புல்லாவெளியில் உள்ள நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க அதிகாரிகள் ஆய்வு.
 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் ஒன்றுதான் சுற்றுலா தலமாக உள்ளது. இதுதவிர பல இடங்களில் வாய்ப்புகள் இருந்தும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நீர்வீழ்ச்சியுடன் கூடிய சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் இருப்பதால் வருடம் முழுவதும் பொதுமக்கள் கொடைக்கானல் மலைக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். 

 

 New tourism in Dindigul


திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலையை சேர்ந்த மணலூர் ஊராட்சி ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புல்லாவெளியில் நீர்வீழ்ச்சி உள்ளது. கோடை மற்றும் மழை காலங்களில் குளிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கும்பக்கரை, குட்லாடம்பட்டி மற்றும் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர். பல வருடங்களாக புல்லாவெளியில் இந்த நீர்வீழ்ச்சி இருந்தும் குறிப்பிட்ட சிலர் மட்டும் தவறாமல் தினசரியும் மாதம் ஒரு முறையும் வந்து கொண்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் வந்து கொண்டிருந்தும் மணலூர் ஊராட்சிக்கு எவ்வித வருமானமும் இல்லாமல் இருந்து வந்தது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் ஒன்றியக்குழு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஹேமலதா மணிகண்டன் மணலூர் ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்து வரும் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் சிறப்பாக செயல்பட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக்க மனு கொடுத்ததின் பயனாக சுற்றுலா அலுவலர் பாலமுருகன் ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.சீத்தாராமன் தலைமையில் ஒன்றியகுழு துணைத்தலைவர் எம்.ஹேமலதா மணிகண்டன், மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் லதாசெல்வகுமார், துணைத்தலைவர் சுருளிராஜன் ஊராட்சி செயலர் திருப்பதி, ஆகியோர் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு ஆய்வு செய்ததின் பயனாக மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய சுற்றுலா தலம் உருவாக உள்ளது. அதிகாரிகள் பார்வையிட்டு புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரும்பு தடுப்பு வேலிகள், குளியலறைகள், உடைமாற்றும் அறைகள், பூங்காக்கள், கழிப்பறைகள், வாகனங்களை நிறுத்துமிடம் உட்பட பல்வேறு வசதிகளை செயல்படுத்த முடிவு செய்து அறிக்கை தயார் செய்துள்ளனர். 

 

 New tourism in Dindigul


இதுகுறித்து ஆத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன் கூறுகையில், பெரும்பாறை அருகே உள்ள இந்த புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மலை கிராமமான மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, கானல்காடு, கல்லகிணறு, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, பாச்சலூர்,பெரியூர் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரானது புல்லாவெளியில் நீர்வீழ்ச்சியாக உள்ளது. பல வருடங்களாக பாதுகாப்பற்ற நிலையில் தான் பொதுமக்கள் குளித்து வந்தனர். மலை கிராமமான மணலூர் ஊராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தவும், புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சுற்றுலாத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்ததின் பயனாக இன்று சுற்றுலா அலுவலர் புல்லாவெளி நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். 

விரைவில் இப்பகுதியில் புதிய சுற்றுலாத்தலம் உருவாகும் என்றார். மேலும் மலையில் வசிக்கும் கிராம மக்களுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். புல்லாவெளி நீர்வீழ்ச்சியை சுற்றுலாத்தலமாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவரும் ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.ஹேமலதா மணிகண்டனுக்கு மலை கிராம மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.