Skip to main content

எழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..!!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

உள்ளாட்சித் தேர்தலிலும் பலரது வேட்பு மனுக்களை நிராகரிக்க தேர்தல் நடத்தும் அதிகாரிகளை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். பல மாதங்களாக வாக்காளர் அடையாள அட்டை வழங்காத நிலையில் அதற்கான அட்டைகளை வழங்கவில்லை. இதனால் புயலில் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பலரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட உள்ளது.


 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரைகுணா என்கிற குணசேகரன் தனது மனைவி கோகிலா முன்மொழிய 12 ந் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 

அடுத்த நாள் அவருக்கே சந்தேகம் வந்து தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் தனது மனு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். காரணம் குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு அருகில் உள்ள  தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்ததாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறும் போது..  துரைகுணா பல வருடங்களுக்கு முன்பு அவரது சொந்த கிராமம் பற்றி எழுதிய ஒரு புத்தகம் பெரியபரபரப்பையும், வம்பு வழக்குகளையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் தனி மரமானார். சமூக ஆர்வலர் என்பதால் குளந்திரான்பட்டு கிராமத்தில் காணாமல்போன ஒரு குளத்தை மீட்டுத்தரச் சொல்லி பல வருடங்களாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். நடவடிக்கை இல்லை. அப்பறம் பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்ய துண்டறிக்கை வெளியிட்டு பிறகு நீதிமன்றத்திற்கும் சென்றார்.


 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இந்த நிலையில் தான் பல வருடங்களாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் சில மாதங்களுக்கு முன்பு குளத்தை கண்டுபிடிக்க ஆட்கள் தேவை என்றும், அதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குபோட்டு சிறைக்கும் அனுப்பினாங்க. ஆனால் அவர் சொன்ன இடத்தில் இருந்த குளத்தை அளந்து கண்டுபிடித்து அதில் இருந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிரை பொக்கலின் வைத்து அழித்துவிட்டு அடையாள கல் நட்டதோட குளம் வெட்டாம போயிட்டாங்க அதிகாரிகள். அதிலிருந்தே அதிகாரிகளுக்கும் அவர் ஊரைச் சேர்ந்த தொழில் அதிபர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் துரைகுணாவை பிடிக்கல. ஒருகட்டத்தில் உள்ளூர் தொழிலதிபர்களால் என் உயிருக்கு ஆபத்து என்று கூட கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.


 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இந்நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும் குளந்திரான்பட்டு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி (பொது) என்ற போதிலும் 12 ந் தேதி அனைத்து ஆவணங்களுடனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தனக்கு முன்மொழிபவர்களையும் மிரட்டி திரும்ப பெறவைப்பார்கள் என்பதற்காக தனது மனைவி கோகிலாவை முன்மொழிய வைத்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்தார். இப்படி எல்லாத்திலும் எச்சரிக்கையா இருந்தவர் மனுவை தான் இப்படி ஊரை மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள். இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்பட்டிருக்கும். 

 

ஆனால் பரிசீலனை நாளில் இதை வெளிப்படுத்த அதிகாரிகள் காத்திருந்திருப்பார்கள். ஆனால் இப்படி எல்லாம் நடந்துவிடுமே என்று சிந்தித்த துரைகுணா தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பார்த்தபோது அப்படியே நடந்துவிட்டதை உறுதி செய்து கொண்டார். இனி புகார், வழக்கு எல்லாம் நடக்கலாம் என்றார்கள்.
 

தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்கிறதா? அல்லது மேல் அதிகாரிகள் சொல்லி நடத்துகிறார்களா என்பதை அதிகாரிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.