Skip to main content

எழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..!!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

உள்ளாட்சித் தேர்தலிலும் பலரது வேட்பு மனுக்களை நிராகரிக்க தேர்தல் நடத்தும் அதிகாரிகளை வைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். பல மாதங்களாக வாக்காளர் அடையாள அட்டை வழங்காத நிலையில் அதற்கான அட்டைகளை வழங்கவில்லை. இதனால் புயலில் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள பலரது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட உள்ளது.


 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான துரைகுணா என்கிற குணசேகரன் தனது மனைவி கோகிலா முன்மொழிய 12 ந் தேதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
 

அடுத்த நாள் அவருக்கே சந்தேகம் வந்து தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் தனது மனு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். காரணம் குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு அருகில் உள்ள  தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்ததாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இதுகுறித்து விபரம் அறிந்தவர்கள் கூறும் போது..  துரைகுணா பல வருடங்களுக்கு முன்பு அவரது சொந்த கிராமம் பற்றி எழுதிய ஒரு புத்தகம் பெரியபரபரப்பையும், வம்பு வழக்குகளையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் தனி மரமானார். சமூக ஆர்வலர் என்பதால் குளந்திரான்பட்டு கிராமத்தில் காணாமல்போன ஒரு குளத்தை மீட்டுத்தரச் சொல்லி பல வருடங்களாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்தார். நடவடிக்கை இல்லை. அப்பறம் பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்ய துண்டறிக்கை வெளியிட்டு பிறகு நீதிமன்றத்திற்கும் சென்றார்.


 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இந்த நிலையில் தான் பல வருடங்களாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் சில மாதங்களுக்கு முன்பு குளத்தை கண்டுபிடிக்க ஆட்கள் தேவை என்றும், அதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குபோட்டு சிறைக்கும் அனுப்பினாங்க. ஆனால் அவர் சொன்ன இடத்தில் இருந்த குளத்தை அளந்து கண்டுபிடித்து அதில் இருந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெல் கதிரை பொக்கலின் வைத்து அழித்துவிட்டு அடையாள கல் நட்டதோட குளம் வெட்டாம போயிட்டாங்க அதிகாரிகள். அதிலிருந்தே அதிகாரிகளுக்கும் அவர் ஊரைச் சேர்ந்த தொழில் அதிபர் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் துரைகுணாவை பிடிக்கல. ஒருகட்டத்தில் உள்ளூர் தொழிலதிபர்களால் என் உயிருக்கு ஆபத்து என்று கூட கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.


 

New tactics in Election Commission to reject writer's nomination .. !!

 

இந்நிலையில்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததும் குளந்திரான்பட்டு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி (பொது) என்ற போதிலும் 12 ந் தேதி அனைத்து ஆவணங்களுடனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தனக்கு முன்மொழிபவர்களையும் மிரட்டி திரும்ப பெறவைப்பார்கள் என்பதற்காக தனது மனைவி கோகிலாவை முன்மொழிய வைத்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வந்தார். இப்படி எல்லாத்திலும் எச்சரிக்கையா இருந்தவர் மனுவை தான் இப்படி ஊரை மாற்றி பதிவு செய்திருக்கிறார்கள். இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக இப்படி செய்யப்பட்டிருக்கும். 

 

ஆனால் பரிசீலனை நாளில் இதை வெளிப்படுத்த அதிகாரிகள் காத்திருந்திருப்பார்கள். ஆனால் இப்படி எல்லாம் நடந்துவிடுமே என்று சிந்தித்த துரைகுணா தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் பார்த்தபோது அப்படியே நடந்துவிட்டதை உறுதி செய்து கொண்டார். இனி புகார், வழக்கு எல்லாம் நடக்கலாம் என்றார்கள்.
 

தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்கிறதா? அல்லது மேல் அதிகாரிகள் சொல்லி நடத்துகிறார்களா என்பதை அதிகாரிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

கஞ்சா புழக்கத்தைக் கண்டுகொள்ளாத காவல்துறை! புகாரளித்தவர் மீது கொலை முயற்சி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
allegations of police did not notice the circulation of cannabis

மதுரை - திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது  நான்கு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதோடு, சுட்டுக் கொல்லவும் முயற்சித்துள்ளது.

இந்தக் கொலை முயற்சியின் பின்னணி என்ன?

திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவராக இருக்கிறார். கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் இவருடைய அலுவலகம் உள்ளது. இவர், தனது அலுவலகத்திலிருந்து கள்ளிக்குடி – விருதுநகர் நான்குவழிச்சாலையில் மையிட்டான்பட்டிக்கு காரில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கார் மோதியது.

இதனைத் தொடர்ந்து காரில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. பெட்ரோல் குண்டு காரில் படாத நிலையில், காரை ஓட்டிவந்த டிரைவர், சாலை ஓரப்பள்ளத்தில் காரை விட்டு தப்பித்துள்ளார். அந்தக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தபோது, எறிவதற்கு முன்பாகவே குண்டு வெடித்துள்ளது. உடனே,  அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிஒடியது.

இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிந்ததும், ஏ.டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆதிநாராயணன் மீது நடத்திய கொலை முயற்சி,  அக்கட்சியின் நிர்வாகிகளுக்குத் தெரியவர, கொல்ல முயன்றவர்களைக் கைது செய்யக்கோரி, கள்ளிக்குடி – விருதுநகர் நான்கு வழிச்சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலைக் கைவிட்டனர்.

allegations of police did not notice the circulation of cannabis

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் “இரண்டு நாட்களுக்குமுன், விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி பகுதியில் காவல்துறையின் துணையோடு கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்து, திருமங்கலம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தேன். நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினேன். காவல்துறையினரின் துணையோடு, ஏற்கெனவே என்னுடைய அமைப்பின் பொருளாளரைக் கொலை செய்த ஞானசேகரின்  ஆதரவாளர்களை ஏவிவிட்டு, என்னைக் கொலை செய்யும் நோக்கத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசி, துப்பாக்கியாலும் சுட்டுக்கொல்வதற்கு முயற்சித்தனர். கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் நான் உயிர் பிழைத்தேன். இந்த விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்றார்.