Advertisment

ஆறு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம்!

New SPs appointed for six districts!

தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக நிஷா, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக சுகுணா சிங், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக சரோஜ்குமார் தாகூர், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக சாய்சரண் தேஜஸ்வி, கோவை மாவட்ட எஸ்.பி.யாக பத்ரிநாராயணன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யாக ஹரிகிரண்பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

மேலும், சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையராக அரவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக அபிநவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை அகாடமி பயிற்சி துணை இயக்குநராக செல்வநாகரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் விமலா, லஞ்ச ஒழிப்பு சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

order police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe