Skip to main content

ஆயுதங்கள் வாங்குவதில் புதிய கட்டுப்பாடுகள்! டிஜிபி சைலேந்திரபாபு அவசர உத்தரவு!

Published on 01/10/2021 | Edited on 01/10/2021
f

 

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் முழு முயற்சியை எடுத்து வருகிறார் தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு. சமீபத்தில் தமிழகம் முழுவதும் தமிழக காவல்துறையினர் நடத்திய ’டிஸ் ஆர்ம் ‘ எனும் ஆப்ரேசனில் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1000-த்திற்கும் மேற்பட்ட பட்டா கத்திகள், கள்ளத்துப்பாக்கிகள், வெட்டறிவாள் உள்ளிட்ட ஏகப்பட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், தமிழக காவல்துறை போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்.

 
              
அந்த உத்தரவில், ‘’ கத்தி, அறிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரிப்பவர்களையும் தயாரிக்கப்படும் இடங்களையும்  கண்டறிய வேண்டும். கண்காணிக்கவும் வேண்டும். ஆயுதங்களை வாங்க வருபவர்களின் பெயர், முகவரி, ஃபோன் எண்கள் ஆகியவைகளை பதிவு செய்ய வேண்டும். மேலும் என்ன காரணங்களுக்காக இந்த ஆயுதங்கள் வாங்கப்படுகிறது? என்பதையும் பதிவு செய்ய வேண்டும். இதுதவிர, வீட்டு உபயோகம் மற்றும் விவசாயம் அல்லாத பிற காரணங்களுக்காக கத்தி, அறிவாள் உள்ளிட்டவைகளை அடையாளம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆயுதங்கள் தயாரிக்கும் இடங்கள், பட்டறைகள், ஆயுதங்களை விற்கும் கடைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும். இதில் அவர்களுக்கு சிரமம் இருப்பின் அவர்களுக்கு போலீசார் உதவி செய்வர் ‘’ என்று சைலேந்திரபாபு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்வுபெற இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ்; தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Shailendrababu IPS who is about to retire; Who will be the next DGP of Tamil Nadu?

 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இன்று டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் அடுத்த தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காகத் தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

 

இதில் தமிழ்நாடு கேடரில் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகாத ஐந்து மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு அதில் மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் அதில் ஒருவர் தமிழக டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழ்நாடு கேடரில் டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா, பி.கே. ரவி, தற்போது சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், ஆபாஷ் குமார் ஆகியோர் தமிழ்நாடு கேடரில் மூத்த அதிகாரிகளாக உள்ளனர். இவர்களில் ஒருவரே தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

Next Story

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு உத்தரவு

Published on 19/06/2023 | Edited on 19/06/2023

 

What was the action taken against Shivaji Krishnamurthy?-Direction to DGP to submit report

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடையில் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ''நான்கு ஆண்கள் அமர்ந்து கொண்டு பெண்கள் முன்னாடி வந்து விடக்கூடாது, எதிராக பேசக்கூடாது என்று பார்க்கிறார்கள். இன்று முதல்வர் பார்த்துவிட்டு எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றால் பாருங்கள், நாளைக்கு என் வீட்டில் 10 பேர் கல் தூக்கி வீசினாலும் எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. திமுகவினர் என் வீட்டில் கல் வீசியதை நான் ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கிறேன். எனக்கு அது பெரிய விஷயமே கிடையாது. அதை எப்படி சந்திக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறேன்'' என ஆவேசமாக பேசியிருந்தார்.

 

n

 

அதைத் தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என குஷ்பு தெரிவித்தார். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என குஷ்பு கூறியிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

 

nn

 

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து தமிழக டிஜிபிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், 'இந்த விவகாரத்தில் என்னென்ன பிரிவுகளில் எல்லாம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. புகாரின் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை என்ன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் விரிவாக அறிக்கையாக தயாரித்து, மூன்று நாட்களுக்குள் ஆணையத்தில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என்ற உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.