இன்றுமுதல் அமலுக்கு வரும் புதிய தளர்வுகள்!

New relaxations coming into effect today!

தமிழ்நாட்டில் இன்று (01/11/2021) ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளும் அமலுக்குவருகின்றன.

தமிழ்நாட்டில் கரோனா பரவல் கணிசமாகக் குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, இன்றுமுதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவைத் தவிர பிற மாநில, மாவட்டங்களுக்கு இடையே சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவையான பணியாளர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளை நடத்தலாம். அரசு பயிற்சி நிலையங்கள் 100% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், நீச்சல் குளங்களைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus relaxation tn govt
இதையும் படியுங்கள்
Subscribe