Advertisment

திருச்சி கொள்ளிடம் புதிய பாலத்தின் 7 தூண்களுக்கு சிக்கல்..!

S_O (1)

காவிரியிலிருந்து இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருந்தால் கடந்த ஜூலை மாதம் மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் கரை புரண்டு ஓடியது தண்ணீர்.

Advertisment

இதனால் திருச்சியில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தினால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்த ஸ்ரீரங்கம் – டோல்கேட் பகுதியை இணைக்கும் 94 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரும்பு பாலத்தின் 3 தூண்கள் கடந்த மாதம் 18-ந்தேதி நள்ளிரவு இடிந்தது.

Advertisment

ஏற்கனவே வலுவிழந்த நிலையில் போக்குவரத்துக்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இருந்ததால் இரும்பு பாலம் இடிந்தாலும் எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. 3 தூண்கள் இடிந்ததை தொடர்ந்து 24 தூண்களுடன் 800 மீட்டர் நீளத்திலான அந்த பாலத்தின் இரு பகுதிகளும் பொதுமக்கள் நடமாட முடியாதபடி அடைக்கப்பட்டன.

இந்த பாலம் இடிந்து விழ காரணம் பழைமையே என்று அரசாங்க தரப்பில் சொன்னாலும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இது மணல் கொள்ளையினால் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து விட்டது என பரபரப்பான குற்றசாட்டு சொன்னார்கள்..

இடிந்து விழுந்த இரும்பு பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் போன்ற வடிவமைப்புடன் சுமார் ரூ.80 கோடியில் கட்டப்பட்டு அது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததால் போக்குவரத்துக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படவில்லை. புதிய பாலத்தின் வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது காவிரி ஆற்றில் மட்டும் தான் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளின் வழியாக மட்டுமே சிறிதளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொள்ளிடம் ஆறு தற்போது மணற்பாங்காக காட்சி அளிக்கிறது. ஆற்றின் கரையோர பகுதிகளில் மட்டும் தண்ணீர் ஓடை போல் சென்று கொண்டிருக்கிறது.

S_O (1)

கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் புதிய பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் நன்றாக வெளியே தெரிகிறது. கொள்ளிடம் புதிய பாலத்தையும் 24 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இதில் 17 முதல் 23 வரையிலான 7 தூண்கள் வெள்ளத்தில் ஏற்பட்ட மணல் அரிப்பினால் பிடிமானம் இன்றி காட்சி அளிக்கின்றன.

ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி உயரத்துக்கு ஏற்கனவே இருந்த மணல் எல்லாம் அடித்து செல்லப்பட்டு விட்டதால் அஸ்திவார தூண்களின் கீழ் பகுதி வரை வெளியே தெரிகிறது. இதனால் புதிய பாலமும் வலுவிழந்து அதன் தூண்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்படலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது என அரசாங்க சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மண் அரிப்பின் காரணமாக புதிய பாலத்திற்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே இரும்பு பாலத்தில் உடைந்த விழுந்த தூண்கள், கற்கள் ஆகியவை ஆற்றுக்குள்ளேயே ஆங்காங்கு மலைக்குன்றுகள் போல் குவிந்து கிடக்கிறது. இதுவரை அதை அகற்றும் வேலைகளை செய்யவில்லை. இதனால், ஆபத்து வருவதற்கு முன்னதாக சரி செய்ய வேண்டும் என சலவை தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

Kollidam trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe