ADVERTISEMENT

சென்னையில் அம்பத்தூருக்கும் பரவியது கரோனா!

11:20 AM Apr 22, 2020 | santhoshb@nakk…


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளது. இதில் 635 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT


அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 116 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திரு.வி.க. நகர்- 42, கோடம்பாக்கம்- 35, அண்ணா நகர்- 27, தண்டையார்பேட்டை- 46, தேனாம்பேட்டை- 42, பெருங்குடி- 8, அடையாறு- 7, திருவொற்றியூர்- 12, வளசரவாக்கம்- 9, ஆலந்தூர்- 7, சோழிங்கநல்லூர்- 2, மாதவரம்- 3 என மொத்தம் 358 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் அம்பத்தூர் மண்டலத்தில் முதன்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மணலி மண்டலத்தில் மட்டும் இதுவரை யாருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நேற்றைய தினம் மட்டும் ராயபுரத்தில் 24, தேனாம்பேட்டையில் 4, தண்டையார்பேட்டையில் 9, திரு.வி.க. நகரில் 3, கோடம்பாக்கத்தில் 4, திருவொற்றியூரில் 3, அம்பத்தூரில் 1, பெருங்குடியில் 1, வளசரவாக்கத்தில் 4, ஆலந்தூரில் 2 பேர் என மொத்தம் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT