Skip to main content

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு புதிய கொள்கை வெளியீடு

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

New policy release for those who gave land to NLC!

 

என்.எல்.சி. இந்தியா நிறுவன விரிவாக்கத் திட்டங்களுக்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான (R&R பாலிசி) புதிய திட்ட கொள்கைகள் குறித்த இந்திய அரசு வெளியிட்ட சட்ட திருத்த வெளியீடு நிகழ்ச்சி நெய்வேலி லிக்னைட் அரங்கில், என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குநர் ராகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. என்.எல்.சி இயக்குநர்கள் ஷாஜிஜான், ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன், ஒற்றாடல் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் வரவேற்றார். 

 

New policy release for those who gave land to NLC!

 

இந்நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி புதியதிட்டக் கொள்கைகளை வெளியிட்டு பேசுகையில், "என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு நிலங்களைக் கொடுத்தவர்களுக்காக புதிய மறுவாழ்வு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித் துறை அமைச்சகத்தின் என்.எல்.சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல வாய்ப்புகளை அளிக்கும் இலகுவான மறுவாழ்வு கொள்கையை உருவாக்கிய என்.எல்.சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை புதிய மறுவாழ்வு கொள்கை உறுதி செய்துள்ளது. திறன் இந்தியா திட்டத்தில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்.எல்.சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. நிலையான வாழ்வாதாரத்திற்கும் ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்பு உடையதாக மாற்றவும் புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு கொள்கை வழி வகுக்கும். இதன்மூலம் கிராம மக்களுக்குப் பயனளிப்பதோடு என்.எல்.சி நிறுவனத்தின் உற்பத்தியும் அதிகரிக்கச் செய்யும்" என்றார்.

 

இந்தப் புதிய கொள்கையின் படி 01.01.2021க்கு பிறகு கையகபடுத்தப்பட்ட நிலங்களுக்கு 23 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மேலும் வேலைவாய்ப்பு அல்லது இருபது ஆண்டுகளுக்கு மாதம் மாதம் 7000 லிருந்து 10,000 வரை அல்லது 5 லட்சம் முதம் 10 இலட்சம் வரை வழங்கவும், கூடுதலாக வீட்டுமனைகளில் 2400 சதுரடி மனையில் 1000 சதுரடி வீடு கட்டித்தரவும் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன், பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் தொடர்வண்டித்துறை இணையமைச்சர் இராசாஹேப் பாட்டீல் தன்வே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி, நிலக்கரித்துறை செயலாளர் அனில்குமார் ஜெயின்,  கூடுதல் செயலாளர் நாகராஜுலு ஆகியோர் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

 

New policy release for those who gave land to NLC!

 


அதேசமயம் இந்தப் புதிய கொள்கையில் குறிப்பிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்,  வேலைவாய்ப்பு உறுதி செய்ய வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் புதிய கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி பா.ம.க.வினர் நிகழ்ச்சி அரங்கிற்கு வெளியில் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.