Skip to main content

விழுப்புரத்தில் புதிய காவல் அதிகாரிகள் பொறுப்பேற்பு...

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
New police officers in Villupuram are in charge

 

விழுப்புரம் சரக டிஐஜியாக எழிலரசனும், மாவட்ட கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணனும் இன்று விழுப்புரத்தில் அவரவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ராதாகிருஷ்ணன்  2002ம் ஆண்டு விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி செய்தவர். அந்த காலகட்டத்தில் விழுப்புரம் நீதிமன்றத்தில் துப்புரவு வேலை செய்த மாரியம்மாள் என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். அது சம்பந்தமாக செய்தி சேகரித்த நாம் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் இந்த சம்பவம் குறித்து பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டோம்.

பொறுப்புடன் நமக்கு பதில் அளித்த அவர், பணி உயர்வு பெற்று மாறுதலில் சென்னைக்கு சென்றார். தற்போது மாவட்ட கண்காணிப்பாளராக பணி மாறுதல் பெற்று விழுப்புரத்திற்கு வந்துள்ளார். இவர் பொறுப்பேற்ற பிறகு கூறும்போது,

மக்கள் பிரச்சனைகளை, குறைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். பொதுமக்களுக்கும், காவல்துறையினரும் நண்பர்களாக பழகும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.

 

New police officers in Villupuram are in charge


விழுப்புரம் சரக டிஐஜியாக பதவி ஏற்று கொண்ட எழிலரசன் விழுப்புரம் சரகத்தை குற்றமில்லாத சரமாக உருவாக்கப்படும். 24 மணி நேரமும் எமது அலுவலகம் திறந்திருக்கும். மக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் குறைகளை வந்து கூறலாம். அதற்கான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும். கரோனா தொற்று காரணமாக அரசு விதிமுறைகளை காவல்துறையும், பொதுமக்களும் முக்கியத்துவமாக கருதி அதன்படி நடக்க வேண்டும் என்று கூறினார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் மற்றும் புதிய காவல்துறை உயர் அதிகாரிகளின் விவேகமான வீரியமான செயல்பாடுகள் எந்த அளவிற்கு பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதை வரும் காலங்களில் தெரியவரும் என்கிறார்கள் நம்பிக்கையோடு விழுப்புரம் மாவட்ட மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.