Skip to main content

உருவாகியிருக்கும் புதிய மோசடி முறை! குறிவைக்கப்படும் இளைஞர்கள்! 

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

A new fraud method has emerged! Targeted youth!

 

திருச்சியில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. பல்வேறு வகைகளில் விளம்பரங்கள் செய்து ஆன்லைன் மோசடிகள் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி வேலை தருவதற்காக இளைஞர்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மென்ட் செயலி மூலம் பணத்தை இளைஞர்கள் இழந்து தவிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

 

முசிறி, மணப்பாறை, துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்கள் இந்த மோசடி கும்பலிடம் சிக்கி பல லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது பற்றி திருச்சி புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் கூறும்போது, “இந்த மோசடிகள் ஆன்லைன் செயலி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நடத்தப்படுகிறது. கல்லூரி பேராசிரியராக இருக்கும் ஒருவர் ரூ. 4.75 லட்சம் இழந்துள்ளார்.

 

இந்த செயலியில் விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்து கிளிக் செய்தால், மோசடி பேர்வழிகள் கொடுக்கும் வங்கி கணக்குக்கு பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய அடுத்த நொடி பொருள் விற்கப்பட்டதாக டிஸ்ப்ளேயில் காண்பிக்கும். மேலும் அதற்கான கமிஷன் தொகையும் டிஸ்ப்ளேயில் தெரியும். எடுத்துக்காட்டாக ரூ. 500 செலுத்தி பொருள் வாங்கினால், உங்கள் கணக்கில் ரூ. 600 கணக்கில் சேர்ந்ததாக காண்பிக்கவும். ஆனால் ரீபண்ட் மட்டும் உடனே தர மாட்டார்கள். அடுத்த கட்டத்திற்கு சென்றால் மேலும் கூடுதல் கமிஷன் தொகை கிடைக்கும் என தகவல் கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் மேற்கண்ட பேராசிரியர் ரூ 4.75 லட்சம் பணத்தை இழந்துள்ளார். ஆனால் ரீபண்ட் அவருக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நம்மிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 

இதேபோன்று 20க்கும் மேற்பட்ட பட்டப் படிப்பு முடித்த இளைஞர்கள் ரூ.5000 முதல் 5 லட்சம் வரை செலுத்தி ஏமாந்துள்ளார்கள். ஒரு இளைஞர் வங்கியில் கடன் பெற்று அந்த தொகையை போலி ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் செயலி மூலம் முதலீடு செய்து தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த டிஜிட்டல் எம்.எல்.எம். மோசடியில் அதிகம் படித்த இளைஞர்களே சிக்கிக் கொண்டுள்ளனர். மோசடி கும்பல் இன்ஸ்டாகிராம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ் அப் பயன்படுத்துவதில்லை.

 

சாட்டிங் மட்டுமே நடக்கும். இதனால் நம்மை ஏமாற்றுபவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் இந்த மோசடி நடந்துள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் இதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறது. ரூ.5000, ரூ.6000 செலுத்தி விட்டு சுதாகரித்து மேலும் பணம் செலுத்தாமல் தப்பித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் போட்ட தொகையை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமாக தொடர்ச்சியாக பணத்தை முதலீடு செய்தவர்கள் தவித்து வருகின்றனர்.

 

ஒரு பொருளை ஆர்டர் செய்தால் நம் கைக்கு அந்த பொருளும் வருவதில்லை. கமிஷன் தொகையும் உடனடியாக நம் வங்கிக் கணக்குக்கு வந்து சேரவில்லை. செயலி டிஸ்ப்ளேயில் வரும் தகவலை மட்டும் நம்பி படித்த இளைஞர்கள் ஏமாந்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. முதலீடு செய்யும் போது இது சாத்தியமா? என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியை பொருத்தமட்டில் உடனடியாக புகார் அளித்தால் மட்டுமே வங்கி கணக்கை முடக்க முடியும். மோசடி பேர்வழிகள் பணத்தை எடுத்து விட்டால் மீட்பது கடினமானது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.