தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6எம்.பிக்கள் வரும் ஜூலை 22- ஆம் தேதி பதவியேற்றுக் கொள்கின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வான மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் எம்.பிக்களாக பதவியேற்கின்றனர். தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் பதவியேற்க உள்ளனர்.இவர்களுக்கு மாநிலங்களவை தலைவரும் துணைக் குடியரசுத்தலைவருமான வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.