Skip to main content

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக விசிக பொதுக்கூட்டம்!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

சனாதான மனுதர்மத்தை பாதுகாத்திடும் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து பந்தநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் கடைவீதியில் 30- ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டத்திற்கு திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் முருகப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழருவி எழுச்சியுறை நிகழ்த்தினார். அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் காஞ்சி பார்வேந்தன் சனாதன பயங்கரவாதம் குறித்தும், புதிய கல்விக்கொள்கை குறித்தும் பேசினார்.

new education policy vsk party meeting at kumbakonam

அவர் பேசுகையில், "புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் மோடி அரசு இரண்டாயிறம் ஆண்டுகளுக்கு பின்னால் தள்ள முயல்கிறது. இந்தியா பல்வேறு மொழிகளை, மக்களை உள்ளடக்கிய ஒரு நாடு, இந்த நாட்டில் பாஜக அரசு சமஸ்கிருதம், இந்தி என்கிற பெயரில் சிதைக்க துடிக்கிறது. மோடி அரசுக்கு மற்ற மாநிலங்கள் இலக்கு அல்ல, தமிழகம் தான். அதனால் தான் புதிய கல்வி கொள்கை மூலம் தமிழை அழிக்கத்துடிக்கிறார். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அதன் அடையாளமான மொழியையும், கல்வியையும் ஒழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும். அந்த தொலைநோக்கு திட்டம் தான் மோடி அரசின் புதிய கல்வி." என்று விரிவாக பேசினார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.