Skip to main content

புதிய மாவட்ட கோரிக்கை- அரக்கோணத்தில் கடையடைப்பு.

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

வேலூர் மாவட்டத்தை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தின உரையின் போது அறிவித்தார். இதற்காக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரக்கோணம் நகர மக்கள் இந்த பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுப்பற்றி பல தரப்பினரும் இணைந்து போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என நடத்தி வருகின்றனர்.
 

NEW DISTRICT REQUEST ARAKKONAM PEOPLES STRIKE FOR TODAY


கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி இன்று (திங்கள்கிழமை) அரக்கோணம் நகரம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் தரப்பில் நாம் பேசியபோது, மாவட்ட தலைநகரான வேலூரில் இருந்து அரக்கோணம் நகரம் சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு போக்குவரத்து வசதி மிகவும் குறைவு. இந்த பகுதி மக்கள் வேலூர் செல்ல வேண்டுமென்றால் இரண்டு பேருந்துகளை மாறிச்செல்ல வேண்டிய சூழ்நிலையே உள்ளது. அதனால் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்கி தர வேண்டும் என்பது 20 ஆண்டு கால கோரிக்கை.


நிர்வாக ரீதியாக இங்கு வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம், ரயில்வே மருத்துவமனை, ரயில்வே பணிமனை, ராஜாளி விமானப்படைத்தளம் போன்றவை அரக்கோணத்தில் உள்ளது. மாவட்ட தலைநகராக உருவாக்க பல்வேறு காரணங்கள், வாய்ப்புகள் உள்ள நிலையில், எங்கள் ஊரை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை பிரிக்காமல் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை பிரித்து எங்களை அவர்களோடு சேர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்கள்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.