Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வெடித்த புதிய சர்ச்சை! 7 ஆயுதப்படை போலீஸார் சஸ்பெண்ட்! 

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

New controversy erupts in Pollachi  case 7 Armed Police Suspended!
                                                     நீதிமன்ற வளாகம் 

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளை சிறைக்கு அழைத்து வரும்போது, நடுவழியில் அவர்களின் உறவினர்களை சந்திக்க வைத்த சம்பவத்தில் சேலம் ஆயுதப்படை எஸ்.ஐ. உள்பட 7 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

 

ஆரம்பத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரையும் கைது செய்தனர். 

 

இவர்கள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மேற்சொன்ன 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக். 20) ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள், நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல் 9 பேரிடமும் வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 9 பேரும் இரு வாகனங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

 

இதில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை அழைத்துச் சென்ற வாகனம் மட்டும் கோவை விமான நிலைய சாலை அருகே திடீரென்று நிறுத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரின் உறவினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே காத்திருந்தனர். இதையடுத்து, 5 பேரும் வாகனத்தில் இருந்தபடி தங்களது உறவினர்களிடம் சந்தித்து சிறிது நேரம் பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பியது. 

 

New controversy erupts in Pollachi  case 7 Armed Police Suspended!

 

இந்நிலையில், தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கான பொள்ளாச்சி பாலியல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் இவர்களுக்கு சேலம் மாநகர காவல்துறை அளித்துள்ள இந்த சலுகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா விசாரணை நடத்தினார். இதில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதிகளுக்கு வழிக்காவல் பணிக்குச் சென்றது சேலம் மாநகர ஆயுதப்படை சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகியோர்தான் என்பது தெரிய வந்தது. 

 

வழிக்காவல் பணியின்போது கவனக்குறைவாகவும், ஒழுங்கீனமாகவும் செயல்பட்டதாக சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 7 பேரையும் ஆணையர் நஜ்மல் ஹோடா அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு, புதன்கிழமை இரவே பிறப்பிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களை சந்திக்க விரும்புவோர் அதற்கென முறையாக விண்ணப்பம் செய்து, சிறைத்துறையில் அனுமதி பெற்ற பிறகே சந்திக்க வேண்டும். ஆனால், நடுவழியில் கைதிகளை உறவினர்களுடன் சந்திக்க வைத்தது நடைமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, கைதிகளுக்கும் அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.