சமீபத்தில் சில ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்தது தமிழக அரசு. அப்போது நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆசியா மரியம் வேறு துறைக்கு மாற்றப்பட்டு வேலூர் சப்கலெக்டராக இருந்த மெக்ராஜ் நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக அறிவிக்கப்பட்டார்.

Advertisment

The new collector is in charge

இந்நிலையில் மெகராஜ் இன்று நாமக்கல் மாவட்ட கலெக்டராக நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பழைய கலெக்டர் ஆசியா மரியம் பொறுப்புக்களை ஒப்படைத்தார். புதிய கலெக்டர் மெகராஜூக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருளரசு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.