தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாச்சலத்தின் வீட்டில் அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தலைவராகசுப்ரியாசாகுவுக்குகூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது இந்தஉத்தரவைத்தமிழக தலைமைச் செயலாளர்இறையன்புபிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராகசுப்ரியாசாகுஐ.ஏ.எஸ்இருந்து வருகிறார். இந்நிலையில்அவருக்குக்கூடுதலாகத்தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாட்டுவாரியத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெங்கடாச்சலத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் பல கிலோ தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 2019-ல் வெங்கடாசலம் தமிழ்நாடு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முறைகேடுகள்நடத்தியதாகக்குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.