Skip to main content

460 கோடியில் அமைக்கப்படவிருக்கும் புதிய பேருந்து நிலையம்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

New bus stand to be set up at Rs 460 crore

 

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 115.68 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் 460 கோடியில் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் மூலம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் 70 இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.

 

இந்த மண் பரிசோதனை முடிவுகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய பதிவுபெற்ற நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதில் நகரப் பேருந்துகள், புறநகரப் பேருந்துகள், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் ஆகியவை நிறுத்தி வைப்பதற்கான இடவசதி, கார், ஆட்டோ, இருசக்கர வாகன நிறுத்துமிடம், உணவகங்கள், எரிபொருள் நிரப்பும் மையம், ஓட்டுநர்களுக்கான தங்கும் விடுதி, உடைமாற்றும் அறை, பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான இடம், காவல் சோதனைச் சாவடி, புத்தக நிலையம் மற்றும் நூலகம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விரிவான திட்ட அறிக்கையை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான தேர்வு குழுவினர் ஆய்வுசெய்து, சிறந்த திட்ட அறிக்கையை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.